Monday, August 9, 2010

பதிவுலகில் மின்மினி

ஸாதிகா அக்கா அன்போடு அழைத்த தொடர் இடுகை.. அவருக்கு என் நன்றிகள்.


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?.

மின்மினி

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.

இல்லை. இந்த வலைப்பூ ஆரம்பிக்க என் கணவர்தான் காரணம். அவருக்கு பிடித்த பெயரான இந்த பெயரில் வலைப்பூ ஆரம்பித்து எழுத ஊக்கம் கொடுத்தார். எனக்கும் பிடித்திருந்தது.

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...

சும்மா ஆரம்பித்ததுதான்.. சும்மா நேரம் கிடைக்கும்போது சில தளங்களை வாசிப்பேன். சிலர் ரொம்ப நல்லா எழுதுவாங்க.. படிக்க சுவாரசியமாக இருக்கும்.. இதுபோல நாமும் எழுதுவோமே என்று ஆரம்பித்ததுதான்..

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நம்முடைய எழுத்துக்களை பிறரிடம் கொண்டு சேர்ப்பது திரட்டிகள்தான்.. மின்மினிக்கும் இத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்றால் திரட்டிகள்தான் காரணம். தமிழ்மணம், இன்டலியில் மட்டுமே இணைத்துள்ளேன். திரட்டிகளுக்கு என் நன்றிகள்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது மன‌துக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது. என்னுடைய சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?..

வீட்டில் நேரம் கிடைக்கும்போது எழுதுவேன்.. இதன்மூலம் சம்பாதித்ததெல்லாம் கிடையாது.. அப்படி எல்லாம் இருக்கிறதா.. இருந்தா சொல்லுங்க.. ஏன்னா நான் புதுசு. என்ன ஒன்று.. நண்பர்களாக உங்களையெல்லாம் பெற்றிருப்பதைவிட சம்பாத்தியம் என்ன சம்பாத்தியங்க.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒன்றுதான் வைத்திருக்கிறேன்.. இந்த மின்மினியின் சிந்தனைகள் மட்டுமே..

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?..

எல்லோரையும் போல நானும் வித்தியாசமாக எழுதவேண்டும் என்ற ஆவல். கோபமெல்லாம் கிடையாதுங்க..

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதன்முதலில் என்எழுத்தை பாராட்டியவர் என் கணவர். அவர் எனக்கு தினமும் சிலபல கருத்துக்களை பகிர்ந்து கொள்வார். அவருக்கு என் முதல் நன்றி.. நான் நுழைவாயிலில் நுழைந்தபோது பாராட்டியவர் ஜலீலாக்கா.. எனக்கு முதன்முதலாக விருது கொடுத்து பாராட்டியவர் ஸ்டார்ஜன். ஜெய்லானி, அக்பர் அண்ணன், ஸாதிகா அக்கா, மகராசன் சார், துபாய் ராஜா சார், ஆசியாக்கா, நிஜாமுதீன், மலிக்கா அக்கா, ஹூசைனம்மா, ஸ்டீபன்
எல்கே, மற்றும் இப்போதும் வாழ்த்துகின்ற நீங்கள்.


ஒருவரை நல்லாயிரு என்று என்றுசொல்லி வாழ்த்துவது அவரை மேலும் மேலும் உற்சாகப்படுத்தும். உங்களுடைய ஒவ்வொரு கருத்துக்களும் என்னை மேலும் சிறப்பாக எழுத வைக்கும்.

என்னை பெரிதும் கவர்ந்த கமாண்ட் மலிக்கா எழுதிய கமாண்ட் என்னை இப்போதும் "எழுது மின்மினி எழுது" என்று உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அன்புடன் மலிக்கா said...

நம் எண்ணங்களில் உதிக்கும் அத்தனையும் எழுத்துக்களாய் கொண்டுவருதல் சிறப்பு.

வலைகுள் புகுந்தாச்சில்ல இனி பின்னிடுங்க மின்மினி.உங்களுக்கெல்லன்று ஒரு வலையை மின்மினி வலை..

மின்மினி
வெளிச்சம்தரும் மின்மினியாய் மட்டும் இல்லாமல். ஒளிவீசும் நட்சத்திரமாய் ஜொலிக்க வாழ்த்துக்கள்.

சந்தேகளிருப்பின் தயங்காமல் கேட்கவும். எனக்குதெரிந்தவரை சொல்லித்தருகிறேன்.

ம்ம் தொடருங்கள் யாரங்கே அடியுங்கள் மேளத்தை .மின்மினியின் வருகையை மற்றவலைதளங்களுக்கு கேட்கும்படி..
March 28, 2010 8:07 AM .


ரொம்ப மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்கிறது மலிக்கா அக்கா. ரொம்ப நன்றி.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நான் இப்போதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன். இனிவரும் காலங்களில் என்னை பற்றி கட்டாயம் குறிப்பிடுவேன்.


இந்த தொடரிடுகையை எல்லோரும் எழுதி விட்டார்கள் என்று நினைக்கிறேன். யாரும் எழுதவில்லை என்றால் இதனை அழைப்பாக ஏற்றுக்கொண்டு எழுதுங்கள்.

மலிக்கா அக்கா, ஜலீலாக்கா அவர்களை அன்போடு அழைக்கிறேன்.


அன்புடன் மின்மினி.

,

Saturday, August 7, 2010

ருசியான தக்காளி ரசம்

மின்மினி எழுதும் அன்பு மடல்.. எல்லோரும் எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாளாச்சி உங்களையெல்லாம் சந்தித்து ஒரு இரண்டு மாதங்களுக்கு மேலிருக்கும் என்று நினைக்கிறேன்.. எழுதவேண்டும்.. உங்களையெல்லாம் சந்திக்கவேண்டும் என்ற ஆவல் மட்டும் மனதில் அடிக்கடி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.. அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் வாய்ப்பது ரொம்ப அரிதாகவே இருக்கிறது.. தொடர்ந்து எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் நிறைய‌ மருத்துவகுணங்கள் இருக்கின்றன. அன்றாட உணவில் சேர்க்கும் பொருட்கள் நம் உடலுக்கும் ஆரோக்கியத்துக்கும் பாதுகாத்து உடல் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன.

சாதாரண தக்காளி ரசம் வைப்பது பற்றியும் அதில் சேர்க்கும் பொருட்களின் மருத்துவகுணங்கள் பற்றியும் இப்போது நாம் காணலாம்.

தக்காளி ரசம்
============

தேவையானவை

கடுகு உளுந்தம்பருப்பு ‍_ சிறிதளவு 1/2 ஸ்பூன்
வெங்காயம் _ சிறிதளவு
கறிவேப்பிலை _ 2 இணுக்கு
மிளகாய் வற்றல் _ 3
தக்காளி _ 2
புளி _ சிறிதளவு
சீரகம் பெருஞ்சீரகம் _ 1/2 ஸ்பூன்
மிளகு _ 1/2 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப‌

முதலில் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிளகு சீரகத்தை பொடித்து வைத்துக்கொள்ள‌வும்..

தாளிக்க வேண்டிய பொருட்களான கடுகு உளுந்தம்பருப்பு வெங்காயம் கறிவேப்பிலை மிளகாய்வற்றல் ஆகியவற்றை கருகிவிடாமல் பொன்னிறமாக தாளித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.

புளியை தண்ணீரில் கரைத்து தக்காளி கலவையுடன் சேர்த்து பொடித்த மிளகு சீரகத்தை சேர்த்து இறக்கிவிடவேண்டும்.

கடுகு _ கால்வலி, கால் உளைச்சலுக்கு நல்லது.
வெங்காயம் _ தலைவலி, ஜலதோசத்துக்கு நல்லது.
மிளகு _ வாய்ப்புத் தொல்லை நீக்கும்.
தக்காளி _ ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
சீரகம், பெருஞ்சீரகம் _ உடல் உஷ்ணம் தீர்க்கும்.
புளி, உப்பு _ சுவைக்கு

அன்புடன் மின்மினி.

,